சிறைச்சாலைக்குள் குழாய் விளக்கை நசுக்கி அதன் பாகங்களை விழுங்கியவர் வைத்தியசாலையில் அனுமதி

ஐந்து வருடங்களாக கண்டி போகம்பர தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்ட நபர் ஒருவர் சிறைச்சாலைக்குள் குழாய் விளக்கை நசுக்கி அதன் பாகங்களை விழுங்கியதால் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 கம்பளையில் வசிக்கும் 42 வயதான இவருக்கு 2022 டிசம்பரில் பல திருட்டு வழக்குகளில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

 சிறைச்சாலை காவலர்கள் இருவர் தன்னை அறையொன்றுக்கு அழைத்துச் சென்று கையடக்கத் தொலைபேசி இருக்கிறதா எனக் கேட்டு அடித்ததாகவும், அப்போது அறையிலிருந்த ட்யூப் பல்பை உடைத்து அதன் பாகங்களை விழுங்கியதாகவும் குறித்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

 வயிற்றில் வீக்கத்துடன் கடுமையான வலி ஏற்பட்டதால், சம்பந்தப்பட்ட நபரை ஸ்கேன் பரிசோதனைக்கு அனுப்பி, அறிக்கை எடுக்க மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

VIDEOS

இந்தியா

இலங்கை

விளையாட்டு

தமிழ்நாடு

உலகம்

Recommended