• முகப்பு
  • குற்றம்
  • திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல பெண்களுடன் தொடர்பில் இருந்து ஏமாற்றிய உலக ஆணழகன்.

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல பெண்களுடன் தொடர்பில் இருந்து ஏமாற்றிய உலக ஆணழகன்.

S.முருகன்

UPDATED: Apr 15, 2024, 5:56:51 PM

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் சொந்தமாக உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தவர் மணிகண்டன் இவர் உலக ஆணழகன் பட்டம் பெற்றவர்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தியா என்ற பெண் சமூக வலைதள பக்கம் மூலம் அறிமுகமாகி இவரது உடற்பயிற்சி கூடத்திற்கு வந்தவருடன் நெருங்கி பழகினார்.

மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகியவர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார்.

பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியதில் சந்தியா பலத்த காயமடைந்தார்.

இதுகுறித்து பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்தவர் சமூக வலை தளங்களில் ஏழைகளுக்கு உதவி செய்வது போல் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

இதன் காரணமாக உடற்பயிற்சி கூடத்தை நடத்துவதை நிறுத்தினார். இந்த நிலையில் இவருக்கு கவிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்து கொண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

தற்போது வைஷ்னவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வசித்து வந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் வேறொரு பெண்ணை தனது மனைவி என கூறி மணிகண்டன் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா, வைஷ்ணவி கேட்டபோது அவர்களையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கவிதா, வைஷ்ணவி இருவரும் மணி மீது புகார் அளித்தனர் 

அதில் மணி பல்வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்து கொண்டு தங்களை ஏமாற்றி வருவதாக தனித்தனியாக புகார் அளித்தனர்.

இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் கவிதா கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதையடுத்து இந்த புகார் மனு போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது போரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மணிகண்டனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் அந்த பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதும் தெரியவந்தது

இதையடுத்து இருவரும் அளித்த புகாரின் பேரில் உலக ஆணழகன் மணிகண்டன் மீது போரூர் அனைத்து மகளிர் போலீசார் தனித்தனியாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்திருப்பது தெரிந்தவுடன் அவர் தலைமறைவாகி விட்டார் இதையடுத்து தலைமறைவாக உள்ள மணிகண்டனை போலீசார் தேடி வந்த நிலையில்

பல்வேறு இடங்களில் பதுங்கி தலைமறைவாக சுற்றி திரிந்த மணியை போரூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

VIDEOS

Recommended