இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உரிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளாக ஆகஸ்ட் 15ம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் இடமாக ராஜகிரிய – சரண மாவத்தையில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகம் குறிப்பிடப்பட்டுள்ளது.