• முகப்பு
  • தமிழ்நாடு
  • பக்ரைனில் கைது செய்யப்பட்ட 28 தமிழக  மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை மத்திய மந்திரிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்.

பக்ரைனில் கைது செய்யப்பட்ட 28 தமிழக  மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை மத்திய மந்திரிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்.

கார்மேகம்

UPDATED: Sep 27, 2024, 10:08:32 AM

சென்னை

பக்ரைன் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்கு தேவையான சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவிகளை வழங்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

மு.க. ஸ்டாலின் கடிதம்

இது குறித்து மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது

பக்ரைன்

நெல்லை மாவட்டம் இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டிற்குச் சென்று மீன்பித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்

இந்த நிலையில் அங்கு எல்லை தாண்டிச் சென்றதாகக் கூறி பக்ரைன் நாட்டு கடலோர காவல் படையினர் அவர்களை  கடந்த 11- ந் தேதியன்று கைது செய்துவிட்டனர்.

மீனவர்கள் கைது

அந்த படகு ஈரான் நாட்டைச் சேர்ந்தது ( சட்ட உதவி) பக்ரைன் கடலோரக் காவல் படையினரின் இந்த கைது நடவடிக்கையின் காரணமாக மீனவர்களின் வருமானத்தை மட்டுமே நம்பியுள்ள அவர்களது குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

எனவே கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான சட்ட உதவிகள் மற்றும் தூதரக உதவிகளை உடனடியாக மேற்கொள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி நீங்கள் உத்தரவிட வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

VIDEOS

Recommended