• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • வாலாஜாபேட்டையில் செல்போன் திருடிய வழக்கில் வாலிபர் கைது கைது செய்த இளைஞரின் முகத்தை மூட காரணம் புரியவில்லை?

வாலாஜாபேட்டையில் செல்போன் திருடிய வழக்கில் வாலிபர் கைது கைது செய்த இளைஞரின் முகத்தை மூட காரணம் புரியவில்லை?

பரணி

UPDATED: Apr 28, 2024, 7:14:11 PM

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தென்கடப்பந்தாங்கல் அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில் போலீசார் வாகனதணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர் சந்தேகிக்கும் விதமாக இருந்ததால் காவல் நிலையம் அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அதில் அந்த நபர் சென்னசமுத்திரதைச் சேர்ந்த நேதாஜி (24) என்பதும் வாலாஜாப்பேட்டையி ல் அஞ்சலகம் அருகே சென்ற இருவரிடம் செல்போன் பறித்து சென்றது தெரிய வந்து .

பதுக்கி வைத்திருந்த செல்போன்கள் மற்றும் ரூ.1.லட்சம் மதிப்புள்ள பைக்  பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிந்து நேதாஜியை கைது செய்து சிறையிலடைத்தனர்

மேலும் செல்போன்களை திருடி வருபவர்களை தேடும்பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

VIDEOS

Recommended