• முகப்பு
  • குற்றம்
  • சோதனை சாவடியில் அதி வேகத்துடன் முறைகேடான முறையில் போலீஸ் சைரன் பயன்படுத்தி வந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கார்.

சோதனை சாவடியில் அதி வேகத்துடன் முறைகேடான முறையில் போலீஸ் சைரன் பயன்படுத்தி வந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கார்.

ராஜ் குமார்

UPDATED: May 9, 2024, 6:38:40 AM

சுய பயன்பாட்டிற்காக முறைகேடாக போலீஸ் ஸ்டிக்கர் மற்றும் போலீஸ் சைரன் பயன்படுத்தி அதிவேகமாக சென்னையை நோக்கி செல்ல முயன்ற ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த சொந்த பயன்பாட்டு சொகுசு காரினை திருத்தணி போக்குவரத்து ஆய்வாளர் சுமேஷ் நாராயணன் அவர்கள் மடக்கி வாகனத்தையும் வாகன ஆவணங்களையும் பரிசோதித்தார்.

அப்போது வாகனத்தில் வந்த வந்தவர்கள் போலீஸ் என்றும் இது போலீஸ் வாகனம் என்றும் முன்னுக்கும் பின்னுக்கும் முரணான பதிலை அளித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த சோதனை செய்த போது அத்தனையும் பொய்யாக உள்ளது இதனால் அந்த காரினை, இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பெயரில் காரை பறிமுதல் செய்து சிறை பிடித்து வழக்கு பதிவு செய்தனர். 

 

VIDEOS

Recommended