• முகப்பு
  • ஆன்மீகம்
  • ஸ்ரீமுஷ்ணம் அருகே கூடலையாற்றூர்  கிராமத்தில் சித்திரை 1ஆம் தேதி சிவன் முகத்தில் சூரிய ஒளி படும் அதிசயம் இது கதையல்ல வரலாறு

ஸ்ரீமுஷ்ணம் அருகே கூடலையாற்றூர்  கிராமத்தில் சித்திரை 1ஆம் தேதி சிவன் முகத்தில் சூரிய ஒளி படும் அதிசயம் இது கதையல்ல வரலாறு

சண்முகம்

UPDATED: Apr 14, 2024, 8:29:21 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கூடலையாற்றூர் கிராமத்தில் அத்தனை வல்ல போஸ் வரர் ஞானசக்தி அம்மாள்  உருவான வரலாறு

ராஜராஜ சோழன் இளைய மகனுக்கு மருத்துவர்களால் தீர்க்க முடியாத குஷ்டம் நோய் வந்துவிட்டதா இதை குணப்படுத்த சித்தர்களிடம் கேட்கும் பொழுது உலகத்தில் மூன்று ஆறு சேரக்கூடிய இடத்தில் 48நாள் தீர்த்தம் செய்துவிட்டு சிவனை வழிபட்டால் இந்த நோய் குணமடையும் என சித்தர்கள் அறிவுறுத்தினர் 

அப்பொழுது ஆய்வு செய்த பொழுது மணிமுத்தாறு வெள்ளாறு ஆகாய கங்கை என மூன்றும் கூடலையாற்றூர் கிராமத்தில் ஒன்றிணைந்தனர்

இதனை கேள்விப்பட்ட ராஜ ராஜ சோழ குடும்பங்கள் உடனே அவரது இளைய மகனை கூடலை யாற்றோர் கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர் 48 நாள் முடிந்தது வியாதியும் தீர்ந்தது

இதனால் ராஜ குடும்பம் இங்கு ஒரு சிவன் கோயில் கட்டுவதற்காக நாட்டுக்கோட்டை செட்டியாரை அணுகின அவரும் எந்த இடத்தில் கோவில் கட்டுவது என தெரியாமல் இருந்த நிலையில் இரவு நேரத்தில் செட்டியாரின் கனவில் நான் பருந்தாக நாளை வானத்தில் வட்டமிடுவேன் அந்த இடத்தில் எனக்கு கோவில் கட்டுமாறு சிவன் கூற அதே போன்று பருந்து வட்டமிட்ட இடத்தில் கோவில் கட்டியதாக கூறப்படுகிறது

அதோடு சித்திரை மாதம் ஒன்று இரண்டு மூன்று நாட்களில் சூரிய ஒளி சிவன் நெற்றியில் ஒலிக்கும் அதோடு சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற திருத்தலமாகும் 

இதனை காண சித்திரை மாதத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து வழிபட செல்வது வழக்கம்.

VIDEOS

Recommended