2029- ல் ஒரே நாடு ஒரே தேர்தல்.

கார்மேகம்

UPDATED: Apr 14, 2024, 9:18:07 AM

நாடு முழுவதும் 18 வது மக்களவை தேர்தலுக்கு தாயாராகிக் கொண்டு  இருக்கும் சூழ்நிலையில் 2029- ல் நடக்கும்

அடுத்த தேர்தலின் போது மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களையும்‌ ஒரே நேரத்தில் நடத்தும் நிலை இப்போதே பா.ஜனதா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு விட்டது

இந்த தேர்தல்‌ முடிந்து 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை பா.ஜனதா இப்போது சொல்லவில்லை 1984 ல் நடந்த மக்களவை தேர்தலின் போது வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதியிலேயே தெரிவித்துள்ளது.

இது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தாலும் 2019- ல்‌ நடந்த தேர்தலுக்கு பிறகுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு முழு வடிவம் பெற்றது 2019 தேர்தலின் போது பா.ஜனதா‌ வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஒரே நேரத்தில் அனைத்து தேர்தல்களும்‌ நடக்கும்‌

அனைத்து தேர்தல்களுக்கு‌ம் ஒரே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்ற‌ வாக்குறுதி இடம் பெற்றிருந்தது.

அடுத்த தேர்தல் வரும் நிலையில் 40 ஆண்டுகளுக்குப்‌ பிறகு பா.ஜனதா‌வின் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான  நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துவிட்டார்

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய  முன்னால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ந் தேதி ஒரு உயர்மட்ட‌ குழு அமைக்கப்பட்டது.

இந்த‌ குழு மிக விரிவாக அனைவரிடமும் கருத்து கேட்டது பொதுமக்களிடம்‌‌ மட்டுமல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகள்‌‌ உச்ச நீதிமன்றம் முன்னால் தலைமை நீதிபதிகள், உயர்நீதிமன்றம்  தலைமை நீதிபதிகள்‌ என்று பல தரப்பட்ட நிபுணர்களிடம்மும்‌ கருத்து கேட்டது‌

இந்த கருத்துக்களையெல்லாம் நன்கு ஆராய்ந்து 18626 பக்கங்களில் அறிக்கையாக தயாரித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம்‌ அந்த குழு வழங்கியுள்ளது ஒரே நாடு ஒரே தேர்தல் முடிவிக்கு மொத்தம் 62 அரசியல் கட்சிகளிடம்‌ கருத்து கேட்டதில் 47 கட்சிகள் அதற்கு தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்தன

பா.ஜனாதா‌, அ.தி.மு.க, பா.ம.க உள்பட 32 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன காங்கிரஸ்‌ தி.மு.க.‌ கம்யூனிஸ்ட் கட்சி‌ திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி‌ போன்ற 15 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன‌.

இந்த அறிக்கையில் மக்களவை தேர்தலையும் மாநில சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தலாம்‌ இதற்கு அரசியல் சட்ட திருத்தம் தேவை ஆனால் மாநில சட்டசபைகளின் ஒப்புதல் தேவையில்லை என்று  கூறப்பட்டுள்ளது

இந்த தேர்தல்களை முடித்த‌ அடுத்த 100 நாட்களில் அனைத்து உள்ளாட்சி‌ தேர்தல்களையும் நடத்தலாம் இதற்கும்‌ அரசியல் சட்டத்தில் திருத்தம் வேண்டும் அதோடு‌ 50 சதவீத‌ மாநிலங்களின் ஒப்புதலும் வேண்டும் 

பா.ஜனதாவிக்கு மக்களவையில் முழு மெஜாரிட்டி கிடைக்கும் பட்சத்தில் 50 சதவீத மாநில‌ சட்டசபைகளின் ஒப்புதலைப் பெற்று 2029 ல் ஒரே நேரத்தில் தேர்தல்களை‌ நடத்தும் எண்ணத்தில் இருப்பதாக‌ அறியப்படுகிறது‌

இதன்படி இடையில் ஒரு சட்ட சபையின் பதவிக்காலம் ஏதாவது காரணத்துக்காக‌ முடிந்துவிட்டால் 5 ஆண்டு பதவிக்காலத்தில் பணியாற்றிய பதவிக் காலத்தை கழித்து மீதமுள்ள காலத்துக்கு  மட்டுமே தேர்தல் நடக்கும் என‌ கூறப்பட்டுள்ளது

இந்த கணக்குப் படி தமிழக சட்டசபைக்கு அடுத்த 2026 ல் தேர்தல் நடந்தால் அந்த சட்டசபையின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் தான் இருக்கும் ஏனெனில் 2029 ல் ஒரே நேரத்தில் மக்களவை தேர்தலுடன் நடத்த அறிவிப்பு வந்துவிடும் 

இப்போதைய‌ நிலையில் நிச்சயமாக 2029 ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வந்து விடும் என்று பா.ஜனதாவால் நம்பப்படுவதால் அதற்குறிய அளவில் நாடாளுமன்றத்திலும் சட்டசபைகளிலும் பயனுள்ள விவாதங்கள்  நடக்க வேண்டும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

  • 6

VIDEOS

Recommended