சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை - 10 ஆக உயர்வு

அந்தோணி ராஜ்

UPDATED: May 9, 2024, 8:16:25 PM

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன்பின் அமைச்சர் அளித்த பேட்டி: 

தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலோடு இரு நாட்களில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு அறிவிக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்படும். 

விபத்துக்கு காரணம் பேராசை. பட்டாசு ஆலை விபத்துகளுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துள்ளது. விதி மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

4ம் தேதிக்கு பிறகு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என கூறினார்.

பலி எண்ணிக்கை - 10 ஆக உயர்வு பட்டாசு ஆலையில் கட்டிட இடிபாடுகளை அகற்றும்போது உடல் சிதைந்த நிலையில் சடலமாக மீட்பு .

 

VIDEOS

Recommended