உத்தமபாளையம் பொதுமக்கள் சாலை மறியல்.!!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பேருந்து நிலையம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பல வருடங்களாக சாலைகள் பழுதாகி கிடக்கிறது.
மேலும் தற்போது சாலையை சரி செய்கிறோம் என்ற பெயரில் சாலைகளை பெயர்த்து எடுத்து உள்ளனர் .குண்டும் குழியுமாக இருந்த சாலையால் விபத்தில் சிக்கியவர்கள் அதிகம் பலர் மரணித்தும் உள்ளனர்.
தற்போது உத்தமபாளையம் முழுவதும் வேலை செய்யும் விதமாக சாலை பெயர்த்து எடுத்ததிலும் விபத்து ஏற்படுகிறது. எனவே சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்து சாலை மறியல் செய்தனர் ஊர் பொதுமக்கள்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்தமபாளையம் தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் , அதிகாரிகளும் , காவல் துறையும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் சாலைமறியல் கைவிடப்பட்டது.
தேனி செய்தியாளர்: இரா.இராஜா