குன்னூர் பகுதியில் நடைபெற்ற பாரத சாரண சாரணியர் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி பங்கேற்பு
பிலிப்ராஜ் ரவி
UPDATED: May 24, 2023, 1:19:50 PM
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடைபெற்ற பாரத சாரண சாரணியர் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி பங்கேற்று ஏழு நாட்கள் தங்கள் குடும்பத்தை விட்டு உயரிய நோக்கத்தோடு வந்திருந்த பெண்களைப் பார்த்து சிங்கப் பெண்களே என்று பாராட்டினார்.
நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் எழுந்தவுடன் பெண்களும் ஆட்டோகிராப் மற்றும் செல்பி எடுக்க அவரை அணுகினர், சிரித்த முகத்துடன் அனைவருக்கும் போஸ் கொடுத்தார்.
கட்சி நிர்வாகிகள் கடந்து வந்து மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்தனர் அவசரமாக அமைச்சர் தஞ்சை கூட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று புறப்பட்டு சென்றார்.