- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காசோலைகள் வழங்கும் விழா, 3 அமைச்சர்கள் பங்கேற்பு!
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காசோலைகள் வழங்கும் விழா, 3 அமைச்சர்கள் பங்கேற்பு!
வாசுதேவன்
UPDATED: May 21, 2023, 6:45:00 PM
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.4.00 லட்சம் மதிப்பீட்டில் காசோலைகளை வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு வருகை தந்து முதலமைச்சர் பொது நிவாரண நிதியை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு முதலமைச்சர் பொது நிவாரண நிதியை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், அரசு முதன்மை செயலாளர் (நெடுஞ்சாலைத்துறை) பிரதீப் யாதவ், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.எஸ்.வினீத், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மேயர் ந.தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநவ், மாவட்ட காவல் காண்காணிப்பாளர் சசாங்சாய்,
மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், தலைமைப் பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) இரா.சந்திரசேகர் (சென்னை), துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாநகராட்சி 4ஆம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.