• முகப்பு
  • tamilnadu
  • PHH - AAY ல் பகுதி நேர ஆசிரியர்கள் இணைக்க முடியுமா?

PHH - AAY ல் பகுதி நேர ஆசிரியர்கள் இணைக்க முடியுமா?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அதிகாரிகளின் அலட்சியப்போக்கு. பஞ்சத்தில் தவிக்கும் பகுதி நேர ஆசிரியர் ஒருவர் தனது குடும்ப அட்டையில் NPHH என்பதை PHH - AAY குடும்ப அட்டையாக மாற்றினால் அதிகமாக அரிசி கிடைத்தால் நல்லது என எண்ணி விண்ணப்பித்தார். மனசாட்சி இல்லாத திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி உணவு பொருள் வழங்கல் அலுவலர் மாற்ற இயலாது என பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவரது முத்திரை இல்லை. மேலும் அலுவலக நகலை விண்ணப்பதாரருக்கும் விண்ணப்பதாரருக்கு அனுப்ப வேண்டியதை அலுவலக கோப்புக்கும் அனுப்பியுள்ளார். NPHH என்பதை PHH - AAY குடும்ப அட்டையாக மாற்ற இயலாததற்கு காரணம் பகுதி நேர ஆசிரியர் பதினெட்டாஆஆஆஆ........ஆயிரம் ரூபாஆஆ.....ஆய் சம்பளம் பெறுவதால் இயலாது என குறிப்பிடப்பட்டுள்ளார். உண்மையில் பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் பத்தாயிரம் மட்டுமே என்பது அவருக்கு தெரியாது. எருதின் நோய் காக்கைக்கு தெரியாது என்பது போல பகுதி நேர ஆசிரியர்கள் வருமை இது போன்ற அலுவலர்களுக்கு எங்கே தெரியப்போகிறது. அவர்களுக்கு பத்தாயிரமாக்கி மே மாதம் சம்பளம் கிடையாது என கூறினால் புரிந்திருக்கும். மேலும் கிம்பளங்களில் குளியலாடும் அதிகாரிகளுக்கு பகுதி நேர ஆசிரியர்கள் வறுமையை அறிய நேரமிருக்காது. உண்மையிலேயே PHH - AAY கார்டு தாரர்கள் பரம ஏழைகளா என்றால் கிடையவேக்கிடையாது. மெத்தை வீட்டுடன் வியாபரிகளாகவும் கூலி தொழிலாளிகளாகவும் உள்ளனர். இன்றைய கொத்தனார் கூலி ஒரு நாளைக்கு 1000 ரூபாய் முதல் 1500 வரை அவரது மனைவிக்கு சித்தாள் தினம் 1000 ரூபாய் கூலி ஆக மொத்தம் தினம் சராசரியாக இரண்டாயிரம் சம்பாதிக்கும் கூலி தொழிலாளி ஏழையாம் அவருக்கு PHH - AAY கார்டாம். அதுவே பகுதி நேர ஆசிரியர் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் அதுவும் மே மாதம் சம்பளம் கிடையாது. விடுமுறை எடுத்தால் சம்பளம் கிடையாது. வருடம் 110000/-₹ ரூபாய் எனில் 365 ÷ 110000 = 301 ரூபாய் தினக்கூலியாக பகுதி நேர ஆசிரியர்கள் பெறுகிறார்கள். அதிலும் போக்குவரத்து செலவவுக்காக ரூபாய் 200 முதல் 300 ரூபாய் வரை ஆகிறது. அரசு பள்ளியானாலும் இலவச பஸ் பாஸ்கிடையாது. பள்ளியில் பெருக்குபவருக்கு கூட போனஸ் உண்டு. பகுதி நேர ஆசிரியர்களுக்கு போனஸ் கிடையாது. பகுதி நேர ஆசிரியர்கள் தின வருமானம் 301 எங்கே தினக்கூலி வருமானம் இரண்டாயிரம் எங்கே அதிகம் வாங்குகிறார்களோ அவர்கள் வறுமைக்கோட்டுக்குள் உள்ளவர்களாம். ஆசிரியர் என்ற பாவத்திற்காக அதிகாரிகளால் அவமதிக்கப் படுகிறார்கள். ஆசிரியர் என்றாலே மாதம் பல லட்சங்கள் வாங்குவதாக நினைக்கிறார்கள். உணவு வழங்கல் அலுவலரின் பதில் கடிதத்தையும் பகுதி நேர ஆசிரியர்கள் ஜூன் 2022 சம்பள பட்டியலையும் படத்தில் காணலாம். கூலிகாரர்கள் அதிகம் சம்பாதிப்பதால் அதிகம் விலை கொடுத்து PHH - AAY அட்டை வாங்கி இருப்பார்களோ? பாவம் பஞ்சத்தில் உழலும் பகுதி நேர ஆசிரியர்களால் விலைகொடுத்து ரேஷன் பொருளையே வாங்க இயலாது. அவர்களால் எப்படி.....? ஆளும் திமுக அரசும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என ஏமாற்றியது. அலுவலர்களும் பகுதி நேர ஆசிரியர்களை அம்பானி அதானியுடன் இணைத்துவிட்டனர். பகுதி நேர ஆசிரியர்களுக்கு எந்த சலுகைகளும் கிடையாதாம். இவர்கள் மாத சம்பளக்காரர்களாம். ஐந்து சவரன் நகையை விவசாய கூட்டுறவு வங்கியில் வைத்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கடன் தொகை தள்ளுபடி செய்தது பகுதி நேர ஆசிரியர்களுக்கு பொருந்தாதாம். பகுதி நேர ஆசிரியர்கள் 90% பேர் விவசாய குடும்பத்தினர் என்பது அரசுக்கும் அரசு அலுவலர்களுக்கும் எங்கே தெரியப்போகிறது. தி கிரேட் இந்தியா நியூஸிற்காக.... பாதிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended