கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்கு யாரெல்லாம் பொருப்பு தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெற்ற ஆவணங்களை வெளியிட்டார் அண்ணாமலை.
கார்மேகம்
UPDATED: Apr 1, 2024, 11:50:52 AM
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்கு யாரெல்லாம் பொருப்பு என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களை அண்ணாமலை வெளியிட்டார்
கச்சத்தீவுக்கும் இலங்கைக்கும் இடையே கடல் பகுதியில் உள்ள சிறிய தீவுதான் கச்சத்தீவு சுமார் 285 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது
இந்த தீவு ராமேஸ்வரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும் இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து பத்தரை மையில் தொலைவிலும் இருக்கிறது.
கடந்த 1974 ம்- ஆண்டு இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது இந்தியா- இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது
தற்போது கச்சத்தீவு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது இதன் காரணமாக கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பதும் தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.
இதையடுத்து கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் மீனவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்
ஒவ்வொரு தேர்தலின் போதும் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார் ? என்பது தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் எதிரொலிப்பது வழக்கம் அந்தவகையில் தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த விவகாரத்தை பா.ஜனாதா கையில் எடுத்துள்ளது
அதாவது கச்சத்தீவு தொடர்பாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவு துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது
வெளியுறவுத் துறை அமைச்சகம் தனக்கு அளித்துள்ள ஆவணங்களை அண்ணாமலை வெளியிட்டுள்ளார் அந்த ஆவணத்தில் கூறியிருப்பதாவது
1875 ம் ஆண்டு முதல் 1948 ம் ஆண்டு வரை கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னர் வசம் இருந்து வந்தது கச்சத்தீவில் மீன்பிடி உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் மன்னர் கைவசமே இருந்தது
ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்ட போது சென்னை மாகாணத்தின் வசம் கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டது
1968 ம் ஆண்டு இலங்கை பிரதமர் டட்லி சேனாநாயக்கா கச்சத்தீவை இலங்கைக்கு தருவது தொடர்பாக இந்திய பிரதமர் இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்
1969 ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது சம்பந்தமான பேச்சு எழுந்த போது எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன
இந்திராகாந்தி இலங்கையுடன் நட்புடன் இருக்க விரும்பியதால் பேச்சு வார்த்தையை தொடர்ந்தார்
1973 ம் ஆண்டு இது தொடர்பாக வெளியுறவுத் துறை செயலாளர் அளவில் பேச்சுவார்த்தை நடந்தது
1974 ம் ஆண்டு வெளியுறவுத் துறை செயலாளர் வேல்சிங் மூலம் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது சம்பந்தமாக அப்போதைய தமிழக முதல் அமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
ஆனால் கச்சத்தீவுக்கு உரிமை கொண்டாடி வருவதை நிருபிக்க இலங்கை அரசு எந்த ஆதாரங்களையும் அளிக்கவில்லை என்றும் வேல்சிங் தெரிவித்துள்ளார்
கச்சத்தீவை இலங்கை உரிமை கோரிய நிலையில் கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமானது என்பது தொடர்பாக தங்களிடம் உள்ள ஆவணங்களை தமிழக அரசு காட்டவில்லை
இறுதியாக 1974 ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு இந்திராகாந்தி தாரை வார்த்து கொடுத்தார் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.