ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்.
TGI
UPDATED: Mar 23, 2024, 5:28:15 AM
ரஸ்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல் :
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள மிகப்பெரிய அரங்கத்தில் இசை கச்சேரியில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 60 60க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் அந்த கட்டடத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததாக வெளியாகி உள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்ளது.
கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
"இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய அரசு மற்றும் மக்களுடன் இந்தியா துணை நிற்கும்" என்று தெரிவித்துள்ளார்.