மெல்போர்னில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள்
அஷ்ரப். ஏ. சமத்
UPDATED: Apr 13, 2024, 10:44:06 PM
மெல்போர்னில் இலங்கை சமூகத்தினர் ஈதுல் பித்ர் பண்டிகையை கொண்டாடினர். இஸ்லாமிய சமூகம் கிரனாட் என் பிரின்சஸ் சென்டரில், மல்கிரேவில் இலங்கையர்களின் பாரம்பரிய காலை உணவுடன் இந்த பெருநாள் ஏற்பாடு செய்யப்பட்டது.400க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு விக்டோரியா அரசாங்கத்தின் பல்கலாச்சார விழா மற்றும் நிகழ்வுகள் செயல்திட்டத்தால் நிதியளிக்கப்பட்டது.
காலை உணவில் கலந்து கொண்ட சமூக உறுப்பினர்கள், குழந்தைகளுக்கு “லோலி” பைகளுடன் மிகவும் சுவையான இலங்கை உணவு வகைகளை வழங்கிய அமைப்பாளர்களை பாராட்டியதுடன் நன்றியும் தெரிவித்தனர்.
கலந்துகொண்ட அதிதிகளில் இலங்கையின் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் முன்னாள் தலைவர்களான எம். ஜிஃப்ரி ஹனிஃபா, இஃப்லால் அப்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் வெற்றிக்காக அயராது உழைத்த உறுப்பினர்களுக்கும் ICASA சார்பாக திரு ரிஸ்வான் நன்றிகளைத் தெரிவித்தார்.