• முகப்பு
  • தமிழ்நாடு
  • நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என அரசு அறிவிப்பு.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என அரசு அறிவிப்பு.

கார்மேகம்

UPDATED: Apr 9, 2024, 9:28:01 AM

நாடுமுழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது இதில் தமிழகத்துக்கு முதல் கட்டமாக வருகிற 19 ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது

இதையொட்டி தேர்தல் பிரசார களம் சூடுபிடித்துள்ளது அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றன

தேர்தல் பிரச்சாரம் வருகிற 17 ந்  தேதியுடன்‌ ஓய்கிறது அதன்பின்னர் 19 ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் 4 நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

இது குறித்து தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் பி. அமுதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது

நாடாளுமன்ற தேர்தல் அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெறும் வகையில் தமிழகத்தில் வருகிற 17. 18. 19. ந் தேதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜீன் 4 ந் தேதியும் என மொத்தம் 4 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன‌

மேற்கண்ட தேதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் அது சார்ந்த பார்கள் அனைத்தும்‌ மூடப்பட்டிருப்பதையும் சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் இவ்வாறு‌ அதில் கூறப்பட்டுள்ளது.

  • 2

VIDEOS

Recommended