• முகப்பு
  • இலங்கை
  • பாடலொன்றில் மாற்றம் ஏற்படுத்தி மீள் பிரசுரம் செய்ததாக நபர் சந்தேகத்தில் கைது

பாடலொன்றில் மாற்றம் ஏற்படுத்தி மீள் பிரசுரம் செய்ததாக நபர் சந்தேகத்தில் கைது

ஜே.எம். ஹாபீஸ்

UPDATED: Apr 17, 2024, 9:19:15 AM

முன்னணி சிங்களப்பாடகரும் கலைஞருமான ரோகன பெத்தகே என்பவரின் பாடலொன்றில் மாற்றம் ஏற்படுத்தி மீள் பிரசுரம் செய்ததாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல சிங்களக் கலைஞரான ரோகன பெத்தகே பாரம்பரிய இசைகளை அறங்கேற்றும் பிரபலமான முன்னணி கலைஞராகும்.

அவரது "சூர்ய மங்கள்ய' என்ற பாடலில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளதாகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி பாடல் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகளில் சூரியனை விழிக்கும் வகையில் அமைந்த இப்பாடல் வழக்கமாக எல்லா புதுவருட நிகழ்வுகளிலும் இசைக்கப்படுவது வழக்கம்.

அதில் மாற்றம் செய்து ஒலிபரப்பியதாக கண்டி, தலாத்துஓயாப் பகுதியைச் சேர்ந்த மதுவரித்திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 31 வயதுடையவராகும். 

மேற்படி சந்தேக நபரை வாரியப் பொல என்ற இடத்தில் வைத்து சைபர் குற்றச் செயல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணனி குற்றச் செயல்கள் விசாரணைப் பிரிவு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

  • 3

VIDEOS

Recommended