ஒயிட் டவுன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மார்ச் 29 இல் திரைக்கு வரும் "எப்புரா"
அஹமத் அஸ்ஜத்
UPDATED: Mar 25, 2024, 11:32:07 AM
ஆறு கதைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம் "எப்புரா"
புதுச்சேரியில் ஓர் இரவில் நடக்கும்கதையை காமெடி கலந்த ஹைபர் லிங்க் மூலமாக 'எப்புரா' என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
Also Read : செத்தாலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் - வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கண்ணீர் மல்க பேசிய துரை வைகோ.
ஒயிட் டவுன் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை இரண்டாம் தயாரிப்பில் வெளியிடுகிறது…
அறிமுக இயக்குநர் A.R.ராஜேஷ் இப்படத்தினை இயக்குகிறார் பல குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் எழுதி இயக்கியிருக்கிறார் "நெடுமி" என்ற திரைப்படத்தில் இணை இயக்குனராக இருக்கிறார்.. இசையமைப்பாளர் ஜாஸ் ஜே பி, ஒளிப்பதிவு டிஜே சக்தி மற்றும் படத்தொகுப்பு அசோக் குமார் மற்றும் ராஜ் கணேஷ்
படத்தில் கதாநாயகனாக *விஜய் முருகன்* நடித்துள்ளார் இவர் முதல் படமான "சேயோன்" என்ற திரைப்படம் உலகளவில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்… மற்றும் இரண்டாம் கதாநாயகனாக *பிரதிப்செல்வராஜ்* நடித்துள்ளார், கதாநாயகியாக நத்தோஷயா, ஜூடோ, கலையரசி, அபிநயா, நடித்துள்ளனர், கார்த்திக் சிவா, காத்து கருப்பு கலை, சுப்பு, வினோத், பாண்டி செல்வம், குமரன் மற்றும் வில்லானாக ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திரு.மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்... மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்த்து தெரிவித்தார் அறிமுகக் கலைஞர்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
Also Read : இலங்கை பிரதமரை சந்தித்த மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன்
மேலும் மார்ச் மாதம் 29ஆம் ,2024 தேதி *எப்புரா* திரைப்படம் வெளியாகும் என ஒயிட் டவுன் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது தமிழ்நாடு தியேட்டர் உரிமையை ரஹ்மத் கிரியேஷன்ஸ் வாங்கி இருக்கிறார்கள்..