- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கா கோபுரம் முன்பு தனது பிரச்சாரத்தை துவக்கினார் திருச்சி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையா.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கா கோபுரம் முன்பு தனது பிரச்சாரத்தை துவக்கினார் திருச்சி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையா.
JK
UPDATED: Mar 27, 2024, 7:46:35 PM
தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.
இதனை அடுத்து தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவின் சார்பில் போட்டியிடும் கருப்பையா இன்று ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் ரெங்கநாதரை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை துவங்கினார்.
இந்த பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பரஞ்சோதி, வளர்மதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார், உட்பட பலர் உடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கா, ரங்கா கோபுரத்தின் முன்பு ரங்கநாதரை வணங்கிய பின்னர் தை தேரோட்ட வீதி, சித்திர வீதி,
அடையவலஞ்சான் போன்ற பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Also Watch : விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கப்படாதது ஏன்? - துரை.வைகோ
முன்னதாக பேசிய வேட்பாளர் கருப்பையா
எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்கநாதரையும் மக்களையும் சந்திக்க கூடியவர் நான் அல்ல, இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.
Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?