• முகப்பு
  • அரசியல்
  • மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம். புன்னகை முகத்துடன் கூட்டம் முடியும் வரை வணங்கி நின்றபடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம். புன்னகை முகத்துடன் கூட்டம் முடியும் வரை வணங்கி நின்றபடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்.

செந்தில் முருகன்

UPDATED: Mar 23, 2024, 1:14:56 PM

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அறிமுக கூட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து அதிமுக வேட்பாளர் பாபுவிற்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அறிமுக கூட்டத்தில் பேசிய அதிமுக பாபு இரட்டை இலை சின்னத்தில் பொதுமக்கள் அனைவரும் வாக்கினை தவறாமல் செலுத்துமாறும் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் வாக்கு சேகரிக்க வேண்டும் என்றும் ,

தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து நிறைவேற்றி தருவேன் எனவும் உரையாற்றினார். 

முன்னதாக நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து முடியும் வரை வேட்பாளர் புன்னகை முகத்துடன் வணங்கி நீண்ட நேரம் நின்றபடி வாக்கு சேகரித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.வி.பாரதி , சக்தி , ரெங்கநாதன் மற்றும் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் கோமல் அன்பரசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பல பங்கேற்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended