• முகப்பு
  • இலங்கை
  • வேத்துச் சேனை கிராம மக்களுக்கு சாணக்கியனின் முயற்ச்சியால் குடி நீர் வசதி

வேத்துச் சேனை கிராம மக்களுக்கு சாணக்கியனின் முயற்ச்சியால் குடி நீர் வசதி

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Mar 27, 2024, 12:47:15 PM

மட்டக்களப்பு மாவட்ட போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனைக்கிராம மக்கள் இதுவரை காலமும் தமக்குரிய சுத்தமான குடிநீரின்றி மிகவும் இன்னறுற்ற நிலையிலேயே தமது வாழ்வைக் கழித்து வந்தனர். இதனால் அக்கிராமத்தில் பலர் நோய்களுக்கும் உட்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்
இவ்விடையம் குறித்து அக்கிராம மக்கள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

Also Read : அரசாங்கம் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தது போல் தற்போது தரமற்ற அரிசியை இறக்குமதி செய்ய முயற்சிக்கின்றது

மக்களின் கோரிக்கைய ஏற்று துரிதமாகச் செயற்பட்ட பாராளுடன்ற உறுப்பினர் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் தொடரப்பு கொண்டு வேத்துச்சேனைக் கிராம மக்களுக்குரிய குழாய் மூலமான சுத்தமான குடிநீர் வழங்குவதற்குரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதற்கிணங்க இன்றயத் தினம் அக்கிராமத்திற்கு குடிநீர் வழங்குவதற்குரிய ஆரம்பக்கட்ட வேலைத் திட்டங்களை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

Also Read : கோவையில் நடைபெற்ற பழங்கால கார் கண்காட்சியில் 100 க்கும் மேற்பட்ட பழங்கால கார்கள் காட்சி படுத்தப்பட்டன.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பிரத்தியேக செயலாளர் விமலனாதன் மதிமேனன், இலங்கை தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட நிர்மான பொறியியல் உதவியாளர் இளையதம்பி பிரதீபன் இலங்கை தமிழரசுக்கட்சி போரதீவுப்பற்று வட்டாரக்கிளை உபதலைவர்; மகேஸ்வரன் கோபிநாத், பாலையடிவட்டை இணைப்பாளர் தங்கராசா ஜெயசீலன், போரதீவு வட்டார இணைப்பாளர் பெரியதம்பி பிரதீப்குமார் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதுவரைகாலமும் தாம் சுத்தமாக குடிநீரின்றி வாழ்ந்து வந்ததாகவும், தமது கோரிக்கையை ஏற்று தமக்குரிய குடிநீர் இணைப்புக்களை எற்படுத்தித் தந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மற்றும் இலங்கை தேசிய நீர்வழங்கல் அதிகார சபையினருக்கும் அப்பகுதி மக்கள் தமது நன்றியை இதன்போது தெரிவித்தனர்.

Also Read : ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன்" க்கு ஆதரவளித்தால் இலங்கை பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும் : ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினர் விளக்கம்

 

 

VIDEOS

RELATED NEWS

Recommended