மதுரவாயல் தொகுதியில் 2 தேர்தல் பணிமனைகளை திமுக எம்.எல்.ஏ காரம்பாக்கம் கணபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
சுந்தர்
UPDATED: Mar 28, 2024, 7:04:56 PM
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் திமுக அதன் கூட்டணி கட்சி சார்பில் ஆங்காங்கே தேர்தல் பணிமனைகள் திறக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சென்னை , மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் 153 மற்றும் 147 ஆவது வார்டில் திமுக கூட்டணி கட்சி சார்பில் தேர்தல் பணி மனைகள் வட்ட செயாளர்கள் மாதவன் உள்ளிட்டோர் ஏற்ப்பாட்டில் திறக்கப்பட்டது.
Also Watch : நீங்கள் இது ஜனநாயக நாடு என்று நினைத்தாள் நான் ஒன்னும் பண்ண முடியாது - சீமான்
இதனை மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ காரப்பாக்கம் கணபதி பங்கேற்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் பின்பு கூட்டத்தில் பங்கேற்ற திமுக உறுப்பினர் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் திமுக கட்சி கொடி துண்டினை நிர்வாகிகள் தொண்டர்களுக்கு எம்எல்ஏ அணிவித்தார்.
Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?
அதன் பின்பு கூட்டணி கட்சியினர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி .ஆர். பாலுவிற்கு தீவிர வாக்கு சேகரித்தனர்.
Also Watch : தனது கட்சியின் சின்னத்தையே மறந்து கை சின்னத்தில் ஓட்டு கேட்ட ஜிகே வாசன்
இதில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.