ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Mar 28, 2024, 7:48:31 AM
கலபொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 4 வருட கடுங்காவல் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இந்த தீர்ப்பினை அறிவித்தார்.
Also Read : யாழ். ஜெட்விங் ஹோட்டலில் மார்ச் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் 'திட்டக் கல்வி யாழ்பாணம்
பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கும் அவர் குற்றவாளி என சட்டமா அதிபரால் அறிவிக்கப்பட்டது.
Also Read : ஆயுதப் போராட்டம் தொடங்கி 40 வருடங்கள் முடிந்து விட்டது
2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூரகல விகாரை தொடர்பில் தெரிவித்த கருத்து தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவித்தமைக்காக இந்த வழக்கு தொடரப்பட்டது.
Also Read : ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
இதே வேளை ஏற்கனவே சிறைவாசம் அனுபவித்த கலகொட அத்தே ஞானசார தேரரை பொது மன்னிப்பின் கீழ் கடந்த அரசாங்கம் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.