• முகப்பு
  • இலங்கை
  • ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Jan 30, 2024, 7:24:48 AM

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று கொழும்பில் சமகி ஜனபலவேகவினால் பிற்பகல் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 பொலிஸார் முன்வைத்த காரணங்களை கருத்திற்கொண்ட கொழும்பு நீதவான் எல். மஞ்சுள ரத்நாயக்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 இதன்படி, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளர் முஜிபர் ரஹ்மான், மத்திய கொழும்பு அமைப்பாளர் அப்சரா அமரசிங்க, சமகி கட்சியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 இதன்படி, மேற்குறிப்பிட்ட பிரதிவாதிகள் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் மயானத்திற்கு அருகில் பிரதீபா மாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை, மில்டன் பெரேரா மாவத்தை மற்றும் ஜும்மா சந்தி வழியாக சங்கராஜ சுற்றுவட்டத்தின் ஊடாக பயணிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனார்.

VIDEOS

RELATED NEWS

Recommended