• முகப்பு
  • இலங்கை
  • வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பலி

வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பலி

வவுனியா

UPDATED: Mar 27, 2024, 3:01:59 PM

வவுனியா ஓமந்தை கள்ளிக்குளம் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பரிதாபமாக மரணமடைந்தார்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,

Also Read : 125பேருக்கு பொங்கல் பொருட்கள் வழங்கிவைப்பு

முல்லைத்தீவில் இருந்து வவுனியா நோக்கிபயணித்துக்கொண்டிருந்த குறித்த வைத்திய அதிகாரியின் வாகனம் ஓமந்தை பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் வைத்தியர் பயணித்த வாகனம் கடும் சேதமடைந்ததுடன் அதனைச்செலுத்திச்சென்ற வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். 

Also Read : ஒரே திட்டத்தின் கீழ் அடுத்த 05 வருடங்களில் வடக்கில் முழுமையான அபிவிருத்தி

சம்பவத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளரும் முன்னாள் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளருமான வைத்தியர் கு.அகிலேந்திரன் அவர்களே மரணமடைந்துள்ளார்.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளதுடன், வாகனம் முந்திச்செல்ல முற்ப்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Also Read : கோவையில் நடைபெற்ற பழங்கால கார் கண்காட்சியில் 100 க்கும் மேற்பட்ட பழங்கால கார்கள் காட்சி படுத்தப்பட்டன.

இதேவேளை டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸ்நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்

VIDEOS

RELATED NEWS

Recommended