நீரில் மூழ்கி நான்கு மாணவர்கள் பலி - ஓருவர் உயிருடன் மீட்பு
இர்ஷாத் ரஹ்மத்துல்லா
UPDATED: Mar 27, 2024, 1:31:41 PM
அலவ்வ பிரதேசத்தில் உள்ள மா ஓயாவில் நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.ஐந்து மாணவர்கள் குழுவொன்று நீரோடையில் குளிப்பதற்குச் சென்ற போது விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
நீரில் மூழ்கிய மாணவர் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Also Read : வத்துகாமம் நகரில் அரச ஓய்வூதியம் பெறுவோர் நடத்திய ஆர்பாட்டம்
பொல்கஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்.