• முகப்பு
  • political
  • பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கும், ஒன்றிய அரசை கண்டித்து, கீழநத்தம் ஊராட்சியில், இளைஞர் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்!

பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கும், ஒன்றிய அரசை கண்டித்து, கீழநத்தம் ஊராட்சியில், இளைஞர் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்!

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 13, 2023, 2:24:37 PM

இந்திய அரசின், பொதுத் துறை நிறுவனங்களான, பாரத ஸ்டேட் வங்கி (S.B.I.) மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் (L.I.C.) ஆகியவற்றின் சொத்துக்களை, கார்பரேட் கம்பெனி அதிபர் அதானிக்கு தாரை வார்க்கும், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, ஒன்றிய அரசைக் கண்டித்து, திருநெல்வேலி புறநகர் மாவட்டம், கீழநத்தம் ஊராட்சிப் பகுதியில், அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (S.B.I.) கிளை முன்பாக, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட, இளைஞர் காங்கிரஸ் சார்பாக, இன்று (பிப்ரவரி. 14) காலையில்,"கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போத்திராஜ் வினோத் தலைமை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஜெகன் நாதன் முன்னிலை, வகித்தார். திருநெல்வேலி மாநகர் மாவட்ட, காங்கிரஸ் தலைவர் கே. சங்கரபாண்டியன், பொருளாளர் எஸ்.ராஜேஷ் முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் உதய குமார், காங்கிரஸ் கட்சியின், ஓ.பி.சி. பிரிவு, மாநில துணைத்தலைவர் "வழக்கறிஞர்" காமராஜ், மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குளோரிந்தா, வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய, துணைத்தலைவர் வெங்கடேசு தன்ராஜ், நெல்லை கிழக்கு மாவட்ட, மாணவர் காங்கிரஸ் தலைவர் தேவவிஜய், மாநகர் மாவட்ட, மாணவர் காங்கிரஸ் தலைவர் வில்லியம்ஸ்,வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பாளையங்கோட்டை கனகராஜ், வள்ளியூர் அருள்தாஸ், மாநகர "ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ்" அமைப்பின், மாநகர் தலைவர் தனசிங்பாண்டியன், பாளையங்கோட்டை, மண்டல காங்கிரஸ் தலைவர் பி.வி.டி. ராஜேந்திரன் உட்பட, சுமார் 50 பேர் கலந்து கொண்டு, ஒன்றிய அரசுக்கு எதிராக, கண்டன கோஷங்களை, எழுப்பினர். நாங்குநேரி சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார், நன்றி தெரிவித்தார். திருநெல்வேலி செய்தியாளர் "மேலப்பாளையம்" ஹஸன்.

VIDEOS

RELATED NEWS

Recommended