- முகப்பு
- இளைஞர் மூளைச்சாவு; 5 பேருக்கு மறு வாழ்வு !
இளைஞர் மூளைச்சாவு; 5 பேருக்கு மறு வாழ்வு !
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கோவை :
கோவை மாவட்டம், வால்பாறை முடிஸ் நகரைச் சேர்ந்தவர் ஹரிகரன் (23) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 16ம் தேதி ஸ்டேன்மோர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, விபத்தில் சிக்கினார்.தலையில் பலத்த காயமடைந்த நிலையில், மூளைச்சாவு ஏற்பட்டது.
ஹரிகரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர்.
சிறுநீரகம், கண், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை ஐந்து நபர்களுக்கு தானமாக வழங்க, கோவை மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
ஹரிகரன் உடலுக்கு கலெக்டர்,மருத்துவ மனை டீன், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர் பாஸ்கர்.
இன்றைய செய்திகள் கோவை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,political news,chennai news,news,coimbatore news,Organ donation,Brainstem