• முகப்பு
  • education
  • கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவிக்கு "இளம் தொழில் முனைவோர் விருது"

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவிக்கு "இளம் தொழில் முனைவோர் விருது"

THE GREAT INDIA NEWS

UPDATED: Jan 29, 2023, 7:08:03 AM

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை,அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம், புதுமைகள்- தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் ஆகியவை இணைந்து நடத்திய, ‘முன்னாள் மாணவர் நேருக்கு நேர் சந்திப்பு’ மற்றும் ‘இளம் தொழில்முனைவோர் விருது வழங்குதல்’ நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை,அறிவியல் கல்லூரி முதல்வர் - செயலர், முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். ஆஸ்திரேலியா ஜெ.எம்.எம். கன்சல்டன்ட் நிறுவனரும், கல்லூரி முன்னாள் மாணவர் எம்.முரளி மனோகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ‘புதிய தொழில் வாய்ப்புகள்’ குறித்து மாணவர்-மாணவியர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சிறப்புரையாற்றியதாவது மாணவர்களின் வாழ்வில் தொழில் வாய்ப்புகள் மிகவும் அவசியம் அதற்கு கல்லூரியில் இருந்தே தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். வேலைவாய்ப்புகளுக்கு ஆங்கில அறிவே அடிப்படை. பெரு நிறுவனங்கள் பட்டதாரிகளிடம் இத் தகுதியை எதிர்பார்க்கின்றன. வேலைவாய்ப்பு எங்கு வேண்டுமானாலும் அமையலாம். அவற்றில் உங்களை நிறுத்திக் கொள்ள அடிப்படை மொழியறிவு அவசியம். ஆங்கிலத்தில் எழுத, படிக்க, உரையாட பழகிக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தாய் மொழியறிவிலும் சிறந்து விளங்க வேண்டும். உங்களுடைய சிந்தனை, செயல் அனைத்து தாய் மொழி வழியாக இருப்பதே சிறந்தது. நம்முடைய மூளை அப்படிதான் சிந்திக்கிறது. இவையனைத்திற்குமான களம் கல்லூரி தான். வேலை வாய்ப்புகளை கல்லூரி வளாக நேர்காணல்கள் மூலமாகவே பெற்று விடுவது நல்லது. படித்து முடித்து விட்டுச் சென்றால் அதிக எண்ணிக்கையிலான போட்டியாளர்களை எதிர் கொள்ள வேண்டிவரும். வேலை வாய்ப்பு 50 சதவீதம், திறமை 50 சதவீதம். தகவல் தொடர்பின் அடிப்படையிலேயே அமையும். உங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சிறந்த பரிந்துரைகளின் பேரிலேயே வேலை கிடைக்கும். அத்தகைய நற்பெயரை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, மாணவர், மாணவியர்களின் பல்வேறு கேள்விகளுக்கு எம்.முரளி மனோகர் பதிலளித்தார். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, பி.பி.ஏ. சி.ஏ. இரண்டாமாண்டு மாணவி ஏ.ரூத் இவாஞ்சலின்னுக்கு "இளம் தொழில் முனைவோர் விருது" வழங்கி சிறப்பிக்கப்பட்டார். விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் முனைவர் ஆர்.பிரபு, பொருளாளர் ஆர்.ஷோபனா மற்றும் மாணவர்-மாணவியர்கள் பேராசிரியர்-பேராசிரியைகள் கலந்து கொண்டனர். புதுமைகள் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் தே.சந்தானகிருஷ்ணன் நன்றிகோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவி ஏ.ரூத் இவாஞ்சலினுக்கு "இளம் தொழில் முனைவோர் விருது" : ஆஸ்திரேலியா ஜெ.எம்.எம்.கன்சல்டன்ட் நிறுவனர் - கல்லூரி முன்னாள் மாணவர் எம்.முரளி சிறப்புரை. கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை,அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம், புதுமைகள்- தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் ஆகியவை இணைந்து நடத்திய, ‘முன்னாள் மாணவர் நேருக்கு நேர் சந்திப்பு’ மற்றும் ‘இளம் தொழில்முனைவோர் விருது வழங்குதல்’ நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை,அறிவியல் கல்லூரி முதல்வர் - செயலர், முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். ஆஸ்திரேலியா ஜெ.எம்.எம். கன்சல்டன்ட் நிறுவனரும், கல்லூரி முன்னாள் மாணவர் எம்.முரளி மனோகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ‘புதிய தொழில் வாய்ப்புகள்’ குறித்து மாணவர்-மாணவியர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சிறப்புரையாற்றியதாவது மாணவர்களின் வாழ்வில் தொழில் வாய்ப்புகள் மிகவும் அவசியம். அதற்கு கல்லூரியில் இருந்தே தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். வேலைவாய்ப்புகளுக்கு ஆங்கில அறிவே அடிப்படை. பெரு நிறுவனங்கள் பட்டதாரிகளிடம் இத் தகுதியை எதிர்பார்க்கின்றன. வேலைவாய்ப்பு எங்கு வேண்டுமானாலும் அமையலாம். அவற்றில் உங்களை நிறுத்திக் கொள்ள அடிப்படை மொழியறிவு அவசியம். ஆங்கிலத்தில் எழுத, படிக்க, உரையாட பழகிக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தாய் மொழியறிவிலும் சிறந்து விளங்க வேண்டும். உங்களுடைய சிந்தனை, செயல் அனைத்து தாய் மொழி வழியாக இருப்பதே சிறந்தது. நம்முடைய மூளை அப்படிதான் சிந்திக்கிறது. இவையனைத்திற்குமான களம் கல்லூரி தான். வேலை வாய்ப்புகளை கல்லூரி வளாக நேர்காணல்கள் மூலமாகவே பெற்று விடுவது நல்லது. படித்து முடித்து விட்டுச் சென்றால் அதிக எண்ணிக்கையிலான போட்டியாளர்களை எதிர் கொள்ள வேண்டிவரும். வேலை வாய்ப்பு 50 சதவீதம், திறமை 50 சதவீதம். தகவல் தொடர்பின் அடிப்படையிலேயே அமையும். உங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சிறந்த பரிந்துரைகளின் பேரிலேயே வேலை கிடைக்கும். அத்தகைய நற்பெயரை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, மாணவர், மாணவியர்களின் பல்வேறு கேள்விகளுக்கு எம்.முரளி மனோகர் பதிலளித்தார். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, பி.பி.ஏ. சி.ஏ. இரண்டாமாண்டு மாணவி ஏ.ரூத் இவாஞ்சலின்னுக்கு "இளம் தொழில் முனைவோர் விருது" வழங்கி சிறப்பிக்கப்பட்டார். விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் முனைவர் ஆர்.பிரபு, பொருளாளர் ஆர்.ஷோபனா மற்றும் மாணவர்-மாணவியர்கள் பேராசிரியர்-பேராசிரியைகள் கலந்து கொண்டனர். புதுமைகள் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் தே.சந்தானகிருஷ்ணன் நன்றி கூறினார். சிறப்பு செய்தியாளர் : மாமுஜெயக்குமார்.

VIDEOS

RELATED NEWS

Recommended