பெரியமாவிலன் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.

தாரிக் கனி

UPDATED: May 5, 2023, 12:44:54 PM

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருமணஞ்சேரி ஊராட்சியில் இருந்து மாப்படுகை ஊராட்சி வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் உடைய பெரியமாவிலன் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில்நேற்று தொடங்கியது.

முன்னதாக பூஜைகள் நடைபெற்று ஜேசிபி எந்திரம் மூலம் பணி தொடங்கியது.

இந்த நிகழ்வில் குத்தாலம் முன்னாள் எம்எல்ஏவும்,திமுக மாநில கொள்கை பரப்புத் துணைச் செயலாளருமான குத்தாலம்.க.அன்பழகன் கலந்து கொண்டு தூர்வாரும் பணியை பார்வையிட்டு விரைந்து முடிக்க கேட்டுக் கொண்டார்.

அப்போது குத்தாலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் குமரா.வைத்தியநாதன், ஒன்றிய துணை செயலாளர் எல்.டி.சி செந்தில், வாணாதிராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கரி தமிழரசன், குத்தாலம் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வடிவால் வாய்க்கால் தூர்வாரும் பணியினால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended