மது நல்லபழக்கம் வெற்றிலை கெட்டபழக்கமான கதை.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
"வெத்தலபாக்கு போடுவதை கெட்டபழக்கமாகவும்,
மது குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மாற்றிய தமிழ்ச்சமூகம்"
தமிழ்க்கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்குவகிப்பது "தாம்பூலம்" எனப்படும் வெற்றிலை,பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்குசம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம்பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு, வெறும் வெற்றிலைபாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்துவிடுவான் தமிழன்.
வெற்றிலைபாக்கு போட்டு வளர்ந்த தாத்தாபாட்டி காலத்தில் ....
கேன்சர் இல்லை,
சர்க்கரைவியாதி இல்லை,
இதயநோய்கள் இல்லை .....
முக்கியமா
மலட்டுத்தன்மை அறவே இல்லை.
ஆக .... வெற்றிலை பாக்கு என்பது பலநோய்களை தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான் தமிழன்.
கலாச்சாரசீரழிவும், அன்னிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தை கெட்டபழக்கமாக சித்தரித்து நம் இனத்தை நோயாளிகளாய் அலைய விட்டிருக்கிறது.
வெற்றிலையின் மகத்துவத்தை தமிழனை மறக்கடிக்கச்செய்து தம்பதிகளை fertility Centre( கருத்தரிப்பு மையம்)களை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது.
வெற்றிலை,
பாக்கு,
சுண்ணாம்பு
அதிலும் கல் சுண்ணாம்பு,
முத்து சிப்பி சுண்ணாம்பு
என வித்தியாசம் காட்டி அது மட்டுமா
ஏலக்காய்,
கிராம்பு,
சாதிக்காய்,
என வாசனை பொருட்கள் கலந்து வாயிலிட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பிவிட வேண்டும் என்றும், மூணாவது ஊறும்நீரே அமிர்தம் என தாம்பூலம் இட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம்.
பெருகி வரும் ஆண்மலட்டு தன்மை குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் motility குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்தமருந்து.
வெற்றிலையில் உள்ள Hydroxy chavicol எனும் Phenol compound ஆனது ஆண்களின் prostate யை வலுப் படுத்துகிறது, மேலும் Prostate புற்று வராமல்தடுக்கும் ஆற்றல் கொண்டது, விதைபையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு prostate இல் இருந்து சுரக்கும்நீரில் உள்ள Zinc மூலம்தான் உயிரே கிடைக்கிறது, அதாவது motility உண்டாகிறது, IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும்முக்கியம்,
அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்பமுக்கியம் , இதையெல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ காதல்மனைவி ஊட்டிவிடும் தாம்பூலத்தை சிலாகித்து பேசி இருக்கிறார்கள் போல,
மலச்சிக்கலா தாம்பூலத்துடன்கொஞ்சம் அதிகம் பாக்கைசேர், வாய் நாற்றமாவெற்றிலையை சேர், வீரியம்வேண்டுமா சாதிக்காய்சேர் என சொன்ன சமுகம் இன்று Infertility center களில் முடங்கி கிடக்கிறது.
******அனுபவஸ்தன்****