சமீபகாலமாக இரவில் மின்வெட்டு மிகவும் அதிகமாக உள்ளது ஏன் ?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சமீபகாலமாக இரவில் மின்வெட்டு மிகவும் அதிகமாக உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் ஒரு நாளைக்கு பலமுறை மின்வெட்டாகிறது. மின் அலுவலகத்திற்கு எப்போது தொடர்பு கொண்டாலும் பிசியாகவே உள்ளது.
அடிக்கடி 1912 இந்த எண்ணிற்கே கால் செய்ய வேண்டியுள்ளது.
முக்கியமாக காலையில் மக்கள் பணிக்கு செல்ல தயாராகும் நேரத்திலும். இரவு உறங்கும் நேரத்திலும் மின்வெட்டாகிறது.
இந்த மாதம் முழுவதும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் அவர்களுக்கு இந்த மின்வெட்டு மன உளைச்சலை தருகின்றது, இதனால் அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக இருக்கின்றது. குறைந்தபட்சம் இந்த மாதம் முழுவதுமாவது மின்வெட்டு இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
செய்தியாளர் பா. கணேசன்.