விதிகளுக்குபுறம்பாக கழிவு நீர் இணைப்புகள்
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
மழை நீர் வடி காலில் விதிகளுக்குபுறம்பாக கழிவு நீர் இணைப்புகள்
- ரூ.19.52 லட்சம் அபராதம்
சென்னையில் மழைநீர்வடிகாலில் விதிகளுக்குப்புறம்பாக கழிவு நீரை வெளி யேற்றி வந்த 2983 இணைப்புகள் அகற்றப் பட்டு உள்ளதோடு, 19.52 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட் பட்ட 15 மண்டலங்களில் 3799 கழிவு நீர் இணைப்புகள் மழைநீர் வடிகால்களில் இணைக்கப் பட்டுள்ளதாக மாநகராட்சிகண்டறிந்து உள்ளது.
இதனை அடுத்து, மாநகராட்சி உதவி / இளநிலை பொறியாளர்கள், துப்புரவுஆய்வாளர், சுகாதாரஆய்வாளர், கழிவு நீர் அகற்றல் வாரிய உதவிபொறியாளர் கொண்ட குழு சென்னைமாநகராட்சி முழுவதும்விதிகளுக்கு புறம்பாக இணைக்கப் பட்டுள்ள கழிவு நீர் குழாய்கள்குறித்து அதிரடி ஆய்வு மேற் கொண்டனர்.
இந்த ஆய்வில் விதிகளுக்குபுறம்பாக சென்னை மாநகரட்சிக் குட்பட்ட பல்வேறுபகுதிகளில் 2983 இணைப்புகள் உள்ளது கண்டறியப் பட்டது.
அதிக பட்சமாக சென்னை மாநகராட்சியின் மத்தியமண்டலமான 6 முதல் 10 வரை 1628 சட்டத்திற்குப் புறம்பான முறை அற்ற கழிவு நீர் இணைப்புகள் உள்ளது கண்டறியப் பட்டது.
இதனை அடுத்து விதிகளுக்கு புறம்பாக மழைநீர்வடிகாலில் இணைக்கப் பட்டிருந்த, கழிவுநீர் இணைப்புகளை அகற்ற முடிவு செய்யப் பட்டது. அதன்படி 2983 இணைப்புகள் அகற்றப் பட்டுள்ளதோடு, 19.52 லட்சம்ரூபாய் அபராதம் விதித்து உள்ளதாக சென்னைமாநகராட்சி சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
செய்தியாளர்
பா. கணேசன்