• முகப்பு
  • கல்வி
  • விவேகானந்தா வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் - 2 பொதுத்தேர்வில் சாதனை 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு.

விவேகானந்தா வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் - 2 பொதுத்தேர்வில் சாதனை 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு.

முத்தையா

UPDATED: May 11, 2023, 7:43:04 PM

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் - 2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதில் +2 பன்னிரென்டாம் வகுப்பு வணிகவியல் பிரிவில் பயின்ற மாணவி ஜே. கீர்த்தனா 600 - க்கு 578 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும் கே. ஐஸ்வர்யா இரண்டாம் இடத்தையும் பி திலகவதி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். 

மேலும் 15 - க்கும் மேற்பட்ட மாணவிகள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.  

33 மாணவிகள் 90 சதவிகித மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதில் சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் தாளாளர் மற்றும் செயலாளர் வித்யரத்னா டாக்டர் மு.கருணாநிதி, இணைசெயலாளர் டாக்டர் ஸ்ரீ ராகநிதி அர்த்தநாரீஸ்வரர் முதன்மை நிர்வாகி சொக்கலிங்கம், பள்ளியின் முதல்வர் டாக்டர். மௌலா தேவி, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பாராட்டி தங்களது வாழ்த்துக்களை மாணவிகளுக்கு தெரிவித்தனர்.

மேலும் விவேகானந்தா வித்யா பவன் பள்ளியில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவிகளுக்கு சிலம்பம், கராத்தே வில்வித்தை, செஸ், அபாகஸ் போன்ற இதர வகுப்புகளிலும் மாணவிகள் கலந்து பல பரிசுகளை வென்ற மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டுகளும் வழங்கினர். 

பள்ளியில் மாணவிகள் சாதனை படைக்க காரணம்  இந்த பள்ளியில் பாதுகாப்பான விடுதி வசதியும் அமைதியான சுற்றுச்சூழலுடன் கூடிய மனஅழுத்தமற்ற கல்வியும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புமே இவ்வெற்றிக்கு வழிவகுத்தது. என்று பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி கீர்த்தனா கூறினார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended