- முகப்பு
- வெள்ளத்தில் முழ்கி கிடக்கும் வேளுக்குடி கிராமம்-உடனடியாக கால்வாயை சீரமைத்து வெள்ளநீரை அகற?
வெள்ளத்தில் முழ்கி கிடக்கும் வேளுக்குடி கிராமம்-உடனடியாக கால்வாயை சீரமைத்து வெள்ளநீரை அகற?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடந்த இரு தினங்களாக இடைவிடாது பெய்துவரும் கனமழையினால் வேளுக்குடி கிராமம் வெள்ளத்தில் முழ்கி உள்ளநிலையில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ளது சித்தனக்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேளுக்குடி கிராமம். இக்கிராமத்தில் ஏழை எளிய மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்தின் பிரதான சாலைகள் அனைத்தும் கடந்த இரு தினங்களாக இடைவிடாது பெய்துவரும் கனமழையினால் வெள்ள நீரில் முழ்கி கிடப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
குறிப்பாக இங்கு உள்ள ஆரம்ப பள்ளி கட்டிடம், உயர்நிலைப்பள்ளி கட்டிடம், நூலகம் உள்ளிட்டவைகள் மட்டுமின்றி ஏராளமான வீடுகளும் வெள்ளநீரால் சூழ்ந்துள்ளன. மேலும் இப்பகுதியில் உள்ள கால்வாய்கள் தூர்ந்துள்ளதால் வெள்ளநீர் வடியாமல் தேங்கி கிடப்பதால் ஊராட்சி மன்றத்தலைவர் மின்மோட்டார் கொண்டு தண்ணீரை இறைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இருப்பினும் கால்வாய்கள் தூர்வாரி சீரமைத்தால் மட்டுமே வெள்ளநீரை விரைவாக அகற்றி மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவர முடியும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.