- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணியில் மூடப்பட்ட பள்ளத்தில் பல்வேறு வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் அவல நிலை.
திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணியில் மூடப்பட்ட பள்ளத்தில் பல்வேறு வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் அவல நிலை.
மேஷாக்
UPDATED: May 10, 2023, 1:50:55 PM
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தியாகி சண்முகம் பிள்ளை வீதிக்கு ஆயில் லோடு ஏற்றுக்கொண்டு மினி வேன் சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்தது.
இந்த மினி வேனை திண்டிவனம் தீர்த்த குளம் பகுதியை சேர்ந்த மூர்த்தி ஓட்டிக்கொண்டு வந்திருந்தார்.
அப்பொழுது திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வரும் தியாகி சண்முகம் பிள்ளை வீதியில் வேன் வந்த போது பாதாள சாக்கடையில் மினி வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் டிரைவர் மூர்த்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனத்தில் பாதாள சாக்கடை பணியில் மூடப்பட்ட பள்ளத்தில் பல்வேறு வாகனங்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
இப்பணியை விரைந்து முடிக்குமாறு அதில் விழுந்தவர்களும் அச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.