• முகப்பு
  • குற்றம்
  • ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட 2 பேர் கைது.

ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட 2 பேர் கைது.

மாரிமுத்து

UPDATED: May 26, 2023, 6:50:58 PM

ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலாத்தூர் பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம் அருகே கடந்த 24.05.2023 அன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மர்மநபர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூததுக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ்  மேற்பார்வையில் ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர்  செல்வகுமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கொலையுண்ட நபர் சம்பவ இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார்.

இதனையடுத்து அந்த ஹோட்டலின் உரிமையாளரான வடக்கு ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த முத்தையா மகன் மோசஸ் அமல்ராஜ் (46) மற்றும் ஹோட்டலில் வேலை பார்க்கும் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் முகமது தாஹா (25) ஆகிய 2 பேரும் அந்த நபரிடம் தகராறு செய்து கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அந்த நபர் உயிரிழந்தது தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் எதிரிகளான மோசஸ் அமல்ராஜ் மற்றும் முகமது தாஹா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ஆத்தூர் காவல் நிலைய போலீசார் கொலையுண்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended