- முகப்பு
- pondichery
- புதுச்சேரி ரெட்டியார்பாளையம் அருகே திருமண நிகழ்ச்சிக்காக வந்த காரின் மீது, கண்டெய்னர் லாரி மோதி 2 பேர் பலி. CCTV.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் அருகே திருமண நிகழ்ச்சிக்காக வந்த காரின் மீது, கண்டெய்னர் லாரி மோதி 2 பேர் பலி. CCTV.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
யான சம்பவம்- பதபதைக்கும் சிசிடிவி கேமரா காட்சி இன்று வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது*
புதுச்சேரியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விழுப்புரம் நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக காரொன்று எதிர்ப்புறம் வந்துகொண்டிருந்தது.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் விழுப்புரம் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி தடுப்பு கடைகளை அடித்து நொறுக்கி விட்டு சீறிப்பாய்ந்து எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது இந்த விபத்தில் காரில் பயணம் செய்த விழுப்புரத்தை சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
காரும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேராக மோதும் நெஞ்சை பதை பதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்