• முகப்பு
  • district
  • பாளையங்கோட்டை கிராமத்தில் வீட்டில் இடி விழுந்து இரண்டு குரங்குகள் சம்பவ இடத்திலே பலி வீட்டில் அனைவரும்...

பாளையங்கோட்டை கிராமத்தில் வீட்டில் இடி விழுந்து இரண்டு குரங்குகள் சம்பவ இடத்திலே பலி வீட்டில் அனைவரும்...

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையங்கோட்டையில் சர்ச் தெருவை சேர்ந்த சிகாமணி இவர் சலவை தொழிலாளி மகன் ரமேஷ் தனியார் நிறுவன ஊழியர் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் இடியுடன் கூடிய மழை ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கியது. இந்நிலையில் சிகாமணி வீட்டில் யாரும் இல்லாத பொழுது இடி விழுந்ததாக தெரிகிறது, இந்நிலையில் அவரது வீட்டில் உள்ள டிவி , ஃபேன், மிக்ஸி , கிரைண்டர் அனைத்து பொருள்களும் எரிந்து நாசமானது. இந்நிலையில் மொட்டை மாடியில் இரண்டு குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் இடி விழுந்ததால் இரண்டு குரங்குகளும் சம்பவ இடத்திலேயே பலியானது. இதனால் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கும் பொழுது ஒரு குரங்கை மற்ற குரங்கு எடுத்துச் சென்றது மீதமுள்ள குரங்கை யாரையும் பக்கத்தில் விடாமல் மற்ற குரங்குகள் தடுத்தது குறிப்பிடத்தக்கது. வீட்டில் யாரும் இல்லாததால் அனைவரும் உயிர் தப்பினர் , இதனால் அதில் உள்ள அனைத்து சுவர்களும் விரிசல் உடன் காணப்பட்டது. ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.

VIDEOS

RELATED NEWS

Recommended