உளுந்தூர்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம் அடைந்தனர்....!!!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சென்னையில் மத்திய காவல் படை அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பாபு வயது 60 இவர் இவரது மனைவி மற்றும் இவரது மகன் ரவிராஜ் ஆகியோர் குடும்பத்துடன் தனது மகனின் பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து கார் மூலம் கள்ளக்குறிச்சி வந்துள்ளனர்.
காரை அவரது மகன் ரவிராஜ் என்பவர் ஓட்டினார் உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலை வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவுந்து விபத்துக்குள்ளானது .
இதில் காரை ஒட்டி வந்த ரவிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் மேலும் பாபு மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் படுகாயம் ஏற்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
விபத்தை குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தனது மகனின் பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வரும்போது கார் விபத்தில் மகன் உயிரிழந்ததால் பெற்றோர்கள் கதறி அழும் காட்சி பார்த்தவர்களை சோகத்தில் ஆக்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி . சுரேஷ்