• முகப்பு
  • அரசியல்
  • டிஆர்பி.ராஜா தமிழக அமைச்சராக பதவி ஏற்ற நிலையில், மன்னார்குடியில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

டிஆர்பி.ராஜா தமிழக அமைச்சராக பதவி ஏற்ற நிலையில், மன்னார்குடியில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

இளவரசன்

UPDATED: May 11, 2023, 6:32:16 AM

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் டிஆர்பி ராஜா இன்று தமிழக முதல்வர் முன்னிலையில் சென்னை ராஜ் பவனில் அமைச்சராக பதவி ஏற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சராக டி ஆர் பி ராஜா பதவி ஏற்றதை ஊடகங்கள் வாயிலாக பார்த்து அறிந்த திமுகவினர் மன்னார்குடியில் பட்டாசுகள்  வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

மன்னார்குடி பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், ருக்மணி பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், டிஆர்பி ராஜாவின் சொந்த ஊரான தலிக்கோட்டையிலும் அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

டிஆர்பி ராஜாவை வாழ்த்தியும், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. டிஆர்பி. ராஜா கடந்த 2011 ,2016, 2021 ஆகிய தேர்தலில் வெற்றி பெற்று மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 

காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் நீண்ட நாட்களாக காவிரி டெல்டா பகுதியை வெற்றி பெற்ற எம்எல்ஏ ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்கின்ற கோரிக்கை டிஆர்பி.ராஜாவை தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டதன் மூலம், காவிரி டெல்டா பகுதி திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றி கொடுத்திருக்கிறார் எனவும்,

டிஆர்பி. ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளதால்    இந்தியாவில் தமிழகத்தை தொழில்துறையில் முதன்மை மாநிலமாக டிஆர்பி.ராஜா உயர்த்துவார் என கருத்து தெரிவித்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended