இன்றைய செய்திகள் சென்னை 17.6.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தென்காசி : சங்கரன்கோயில் அருகே ஆராய்ச்சிப்பட்டியில் தேர்வு முடிவு வெளியாக இருந்ததை அறிந்து 10ம் வகுப்பு மாணவன் பிரபாகரன் கிணற்றில் குதித்து தற்கொலை. சேலம் : அழகாபுரம் பகுதியில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு கே.என்.நேரு கலந்துகொண்டு, பல்வேறு துறைகளின் சார்பில் 486 பயனாளிகளுக்கு, 2.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். திருப்பத்தூர் : வாணியம்பாடி ஜாப்ரபாத் பகுதியில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை. விருதுநகர் : ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு - உறவினர்கள் சாலை மறியல். ராஜபாளையம் அருகே கோயில் திருவிழாவில் மோதல். பஞ்சு மார்க்கெட் நேரு சிலை அருகே மறியல் - போக்குவரத்து பாதிப்பு. இரு பிரிவினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையால் பதற்றம். கன்னியாகுமாரி : தோவாளை தாலுகாவிற்குட்பட்ட துவரங்காடு சந்திப்பில் இருந்து முக்கடல் செல்லும் திருப்பு முனையில் பல மாதங்கள் கடந்தும் நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் கண்டுகொள்ளாததால் அவலநிலை.. சம்பந்தப்பட்ட அதிகாரி உடனே நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்ய கோரிக்கை. விருதுநகர் : சிவகாசி அருகே கைபேசி டவரை காணவில்லை என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தென்காசி : புதிய மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த சங்கரன்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன் (56) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ராணிப்பேட்டை : அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை பெய்தது. மங்கம்மாபேட்டை, ஜோதி நகர், சுவால்பேட்டை, எஸ்.ஆர்.கேட், வெங்கடேசபுரத்தில் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேல் கனமழை கொட்டுவதால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. ஈரோட்டில் : சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கில் இடைத்தரகர் மாலதிக்கு ஒருநாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் 5 நாள் அனுமதி கேட்ட நிலையில் ஒருநாள் மட்டும் அளித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூர் : அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. ஆட்டையம்பாளையம், மடத்துப்பாளையம், காசிகவுண்டன்புதூர், வேலாயுதம்பாளையத்தில் கனமழை பெய்தது. தருமபுரி : பள்ளிகள் திறப்பு சாக்பீஸ் விற்பனை அதிகரிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி.

VIDEOS

RELATED NEWS

Recommended