இன்றைய முக்கிய செய்திகள் 16.5.2022.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
1. அம்பேத்கரின் கனவை தோற்கடித்தது ஆரிய மாடல். அம்பேத்கரின் கனவை நிறைவேற்றியது திராவிட மாடல்.
காமராசர் கொண்டு வந்தது காங்கிரஸ் மாடல் அல்ல. அதுவும் திராவிட மாடல் தான்
- திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா
2. தன்னை நோக்கி எச்சில் துப்பியதாக கூறி இளைஞரை தாக்கிய காவலர் லூயீஸ் ஜோன், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்
- சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நடவடிக்கை.
3. தாமஸ் கோப்பை பேட் மிண்டன் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்தது இந்தியா.
4. கோத்தகிரி அருகே கொப்பையூர் கிராமத்தில் காட்டு யானை தாக்கி இருளர் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர் என்பவர் உயிரிழப்பு.
5. சென்னை, ஆதம் பாக்கத்தில் உள்ள எலக்ட்ரானிக் கடையில் தீ விபத்து.
6. நெல்லை அம்பை அருகே சுகுமார் என்பவர் வெட்டிக்கொலை
- போலீசார் விசாரணை
7. உத்தரப் பிரதேசம் பதோஹி அருகே கங்கை நதியில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
8. தருமபுரி பாலக்கோடு அருகே நல்லாம் பட்டியில் மின்சாரம் தாக்கி மக்னா யானை இறந்த சம்பவத்தில் 3 பேர் சஸ்பெண்ட்.
9. நாமக்கல் ராசிபுரம் பகுதியில் கூலித் தொழிலாளி கொலை செய்யப் பட்ட சம்பவத்தில் மணிகண்டன் என்பவர் கைது
10. மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக மணிகண்டன் வாக்குமூலம்.
11. கல்குவாரியில் இருந்து மீட்கப் பட்ட செல்வம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு.
கல்குவாரி விபத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் .
தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரவில் பணிகளை தொடர்வதில் சிக்கல் நிலவுகிறது
நெல்லையில், சபாநாயகர் அப்பாவு பேட்டி.
12. திருவாரூர் அடியக்க மங்கலம் பகுதியில் 4 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தந்தைக்கு போலீசார் வலைவீச்சு.
13. நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் முருகன், விஜய் ஆகியோருக்கு தலா ₨ 1 லட்சம் நிவாரணம்.
₨1 லட்சத்திற்கான காசோலையை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் வழங்கினர்.
14. பெரம்பலூர் அருகே அம்மா பாளையத்தில் நள்ளிரவில் வீட்டில் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கி நகை மற்றும் காரை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தில் நான்கு முகமுடி கொள்ளையர்கள் கைது.