• முகப்பு
  • crime
  • வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆடுகளை திருடிய 3 பேர் கைது.

வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆடுகளை திருடிய 3 பேர் கைது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 13, 2023, 7:02:04 PM

கடந்த 07.02.2023 அன்று தூத்துக்குடி திரவியபுரம் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் விஜயசேகர் (33) என்பவர் தனது வீட்டின் தொழுவத்தில் கட்டி வைத்திருந்த ஆடுகளில் 8 ஆடுகள் காணாமல் போயுள்ளது. அதேபோன்று கடந்த 10.02.2023 அன்று தூத்துக்குடி ஸ்டேட்பாங்க் காலனி பகுதியைச் சேர்ந்த அழகு பெருமாள்சாமி மனைவி வீரலட்சுமி (37) என்பவரும் தனது வீட்டு தொழுவத்தில் கட்டி வைத்திருந்த ஆடுகளில் 2 ஆடுகள் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து மேற்படி பாதிக்கப்பட்டவர்கள் இன்று (13.02.2023) அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜ் மகன் பாஸ்கர் (24), தூத்துக்குடி ரஹ்மத் நகர் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மகன் கோவிந்தராஜன் (எ) கோபி (21) மற்றும் தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மாரிமுத்து (21) ஆகியோர் மேற்படி இரண்டு இடங்களிலும் ஆடுகளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக வடபாகம் காவல் நிலைய போலீசார் மேற்படி எதிரிகள் பாஸ்கர், கோவிந்தராஜன் (எ) கோபி மற்றும் மாரிமுத்து ஆகிய 3 நபர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்த திருடப்பட்ட ரூபாய் 96 ஆயிரம் மதிப்புள்ள 10 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர் மாரிமுத்து.

VIDEOS

RELATED NEWS

Recommended