பண்ருட்டி அருகே கூரை கொட்டகைக்கு தீ வைத்த 3 பேர் கைது.
இடும்பன்
UPDATED: May 15, 2023, 7:13:01 AM
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தாழம்பட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் 73 அதே ஊரை சேர்ந்த உறவினரான பூராசாமி என்பவர்களுடைய குடும்பத்திற்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது வந்தது.
நேற்று( 14-5-23) காலை கலியபெருமாள் வீட்டில் தனியாக இருந்தார் அப்போது அங்கு வந்த பூரா சாமி மகன்கள் பாலசுந்தரம் 50 ராஜசேகர் 44 மற்றும் ரவி மகன் கௌதம் 30 ஆகிய மூவரும் கலியபெருமாளிடம் தகராறு செய்ததுடன் அவரை உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும் கலியபெருமாள் வீட்டின் பின்பக்கம் உள்ள கூரை கொட்டகைக்கு தீ வைத்து விட்டு ஓடி விட்டனர் இதில் கொட்டகை முழுவதும் இருந்து சாம்பலானது.
இந்த பலத்த காயம் அடைந்த கலியபெருமாள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த தகவல் அறிந்த காடாம்புலியூர் காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன் பாலசுந்தரம் உட்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுகிறது.