• முகப்பு
  • crime
  • பாதாள சாக்கடை கட்டுவதற்காக வைத்திருந்த கட்டுமானத்திற்கு தேவைப்படும் ஜாக்கிகளை திருடிய 3 பேர்.

பாதாள சாக்கடை கட்டுவதற்காக வைத்திருந்த கட்டுமானத்திற்கு தேவைப்படும் ஜாக்கிகளை திருடிய 3 பேர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 14, 2023, 12:53:13 PM

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்படி பாதாள சாக்கடை நடைபெற்று வரும் பகுதியில் கட்டுமானத்திற்கு வைக்கப்பட்டிருந்த 22 ஜாக்கிகள் கடந்த 24.12.2022 அன்று திருடுபோயுள்ளது. இதுகுறித்து மேற்படி பாதாள சாக்கடையின் காண்ட்ராக்டரான முத்தையாபுரம் தோப்பு தெருவை சேர்ந்த சர்க்கரை மகன் பாலமுருகன் (40) என்பவர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்த தவசிமுத்து மகன் மாதவன் (34), தெர்மல்நகர் கேம்ப் I பகுதியைச் சேர்ந்த லசால் மகன் ஜெய பென்சிங் (40) மற்றும் முத்தையாபுரம் பி.டி ஆறுமுகம் தெருவை சேர்ந்த முருகன் மகன் மாசானமுத்து (37) ஆகிய 3 பேரும் சேர்ந்து மேற்படி கட்டுமான பணிக்காக வைக்கபட்டிருந்த ஜாக்கிகளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து எதிரிகளான மாதவன், ஜெய பென்சிங் மற்றும் மாசானமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 66,000/- மதிப்பிலான 22 ஜாக்கிகளையும் பறிமுதல் செய்தார். தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர் மாரிமுத்து.

VIDEOS

RELATED NEWS

Recommended