• முகப்பு
  • crime
  • வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அட்டூழியம்.

வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அட்டூழியம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவர் வீடு புகுந்து மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய உதவி காவல் ஆய்வாளர்கள் பாரதி மற்றும் பிரபாகரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். போலிசார் மேற்கொண்ட விசாரணையில் நாராயணசாமியை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன், அவரது மனைவி பரமேஸ்வரி, அவரது மகன் ராமு, மற்றும் அலெக்ஸ், பாண்டியன் அஜித் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தியாகதுருகம் அருகே கொலை நடைபெற்ற இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்

VIDEOS

RELATED NEWS

Recommended