• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலின் மாசி கட்டளை சொத்துக்கள் ஆக்கிரமிப்பு - இந்து மக்கள் கட்சி.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலின் மாசி கட்டளை சொத்துக்கள் ஆக்கிரமிப்பு - இந்து மக்கள் கட்சி.

மாரிமுத்து

UPDATED: May 16, 2023, 10:25:52 AM

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலின் மாசி கட்டளை சொத்துக்கள் தூத்துக்குடி புதுக்கோட்டை குமாரகிரி பஞ்சாயத்து பகுதியில் சர்வே எண் 314 மற்றும் ஏனைய சர்வே எண்கள் கொண்ட சுமார் பல கோடி மதிப்புகள் பெற்ற சொத்துக்கள் ஒரு சிலர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆக்கிரமிப்பு செய்து மோசடி கிரயப்பத்திரமும் செய்யப்பட்டுள்ளது . இதனை ரத்து செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் சார்பாக தொடர்ந்து பல்வேறு புகார் மனுக்கள் கொடுக்கப்பட்ட நிலையில் மாவட்ட பத்திர பதிவாளர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் சார்பாக உள்ளிருப்பு போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

மாநிலச் செயலாளர் தா.வசந்தகுமார் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் பத்திர பதிவாளர் அலுவலகத்தில் ஒன்று திரண்டு காவல் துறையினர் பேச்சுவார்த்தையின்படி மாவட்ட பத்திர பதிவாளர் அலுவலகத்தில் ஒரு வாரகாலத்திற்குள் இந்த புகார் மனுவுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற உத்தரவாதத்தின் பெயரில் அங்கிருந்து இந்து மக்கள் கட்சியினர் கலைந்து சென்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended