நீரில் மூழ்கி இறந்த 6 மாணவிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார் தொல் திருமாவளவன்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம்* நெல்லிக்குப்பம் அருகே கெடிலம் ஆற்றில் கடந்த (05-06-2022) அன்று குளிக்கச் சென்ற அருங்குணம் குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏழு இளம் பெண்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று (09-06-2022) அருங்குணம் குச்சிபாளையம் கிராமத்திற்கு தொல் திருமாவளவன் அவர்கள் நேரில் வந்து நவநீதா (20), பிரியா (19), சுமிதா (18), சங்கவி (16), மோனிஷா (16) ஆகியோரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூபாய் 25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி.